Thursday, April 30, 2009

வானம் பார்த்த பூமியில் ஒரு குடையின் கதை..

ஈரத்தின் ஓரத்தை தொட்டு விட
துடிக்கும் ஒரு வானம் பார்த்த தேசத்தில்
குடைக்கு எங்கு கிடைக்க போகிறது
மழையின் ஸ்பரிசம்..!!

இங்கு கோடை தவிர ஒரு
பருவமும் வந்ததில்லை
சூட்டை தவிர ஒரு
உணர்வும் கண்டதில்லை…!!

குடைகள் தவமிருக்க
படைகள் துயர் துடைக்க
மழை வந்து கொண்டே இருக்கிறது
நூற்றாண்டு காலமாக …!!

குடைக்கெதற்கு மழை..?
வெயில் போதாதா..!
விவாதங்கள் பல கடந்து..
நைந்து தான் போய் விட்டது அந்த குடை…
தூக்கி எரிய குப்பை தொட்டி தேடும் படலம்…!!

வருந்துவதை தவிர
செய்வதற்கென்ன இருக்க முடியும்
குடை கொண்டானுக்கு….!!

ஈரத்தின் ஓரத்தை தொட்டு விட
துடிக்கும் ஒரு வானம் பார்த்த தேசத்தில்
குடைக்கு எதற்கு மழையின் ஸ்பரிசம்??!!!!

//**இலங்கை பிரச்சினைக்காக வருத்தம் மட்டுமே
//**பட முடிந்த இந்திய மக்களில் நானும் ஒருத்தி..

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in